ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்துள்ளார். பேரணியாக சென்று ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி விஷ சாராய மரணங்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து மனு அளித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு தொடர்பாகவும் ஆளுநரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்தார். அதாவது, கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.