எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக பேரணி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இபிஎஸ் தலைமையில் பேரணி நடந்து வரும் நிலையில், கிண்டி அருகில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி பெரும்பாலான வாகனங்கள் அங்கு அணிவகுத்து நிற்கிறது.

அரசு பேருந்துகள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக கிண்டி, சைதாப்பேட்டையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.