விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உழுக்கியுள்ளது. அதே சமயம் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக போலீசார் தமிழக முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கள்ளச்சாராய வழக்கு சிபிசிஐடியை விசாரணைக்கு மாற்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் கள்ளச்சாராயம் குறித்து புகார் தெரிவிக்க புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் 9445463494, 9498111155, திருவள்ளூர் 6379904848 மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.