உத்தர் பிரதேஷ் மாநிலம் கான்பூர் பகுதியில் அமைந்துள்ள ராமா மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் மூன்றாம் ஆண்டு படித்து வந்தவர் ஷாஹில் சரஸ்வத். இரண்டு தினங்களுக்கு முன்பு ஷாஹில் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இந்நிலையில் கல்லூரியின் பேஸ்மெண்டில் ஷாஹில் சரஸ்வத் சடலம் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது.

இதனைப் பார்த்த காவலாளி காவல்துறையினருக்கு தகவல் கொடுக்க விரைந்து வந்தவர்கள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்டமாக ஷாஹில் ரூம் மேட் அமித் என்பவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.