தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் ராகிங் தடுப்புக் குழு கட்டாயம் அமைக்க வேண்டும் என கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். ராகிங் புகாரை கையாளும் ஆசிரியரின் பெயர், முகவரி, செல்போன் எண்ணை நோட்டீஸ் போர்டில் ஒட்டவும், புகார் பெட்டி வைக்கவும் அறிவுறுத்திய கல்லூரி கல்வி இயக்ககம், தடுப்பு குழுவில் HOD, காவல்துறை, செய்தித்துறை, மாணவர்களின் பெற்றோர் ஆகியோரை இணைக்க ஒருவாரத்தில் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளது.