மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. நவம்பர் 9 ஆம் தேதி இன்று கனமழையால் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது போல, நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மாணவர்கள் குஷியாகியுள்ளனர்.