பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, பல பெண்களின் ஆதார், பான் விபரங்களை பயன்படுத்தி, போலி ஜிஎஸ்டி சான்றிதழ்களை உருவாக்கி வரி ஏய்ப்பு செய்துள்ளனர். மேலும், மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்த பெண்களுக்கு அதிகளவில் சொத்து, ஜிஎஸ்டி செலுத்துவதாக பான்கார்டு விவரம் தெரிவித்துள்ளதால், அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தபோது, இந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.