கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இதுவரை 11.85 லட்சம் குடும்ப தலைவிகள் மேல்முறையீடு செய்துள்ளனர். ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பணம் வராத பலரது விண்ணப்பங்கள் கள ஆய்வில் உள்ளது. மகளிர் உரிமைத் தொகைக்கு மேல்முறையீடு செய்த தகுதியான பெண்களுக்கு இம்மாதம் 25ம் தேதிக்கு மேல் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. இதனால், இந்த மாதம் மேல்முறையீடு செய்த தகுதியானவர்களுக்கு ரூ.1000 கிடைக்காது எனவும் அடுத்த மாதம் அவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.