மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இன்று மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் செல்போன் பயன்படுத்த தடை என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில், “கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கவும் அனுமதியில்லை.

நூலகத்தில் புகைப்படம், வீடியோ, தின்பண்டங்கள், குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்களுக்கு அனுமதி இல்லை” என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நூலகத்தில் குழந்தைகள் பிரிவில் 14 வயதுக்கு உட்பட்டோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.