45 துணை ஆட்சியர்களை வட்டாட்சியர்களாக பதவி இறக்கம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 2014-2019 ம் ஆண்டு வரை வட்டாட்சியர்களுக்கான பதவி உயர்வில் முறைகேடு நடந்ததாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இக்காலத்தில் பதவி உயர்வு பெற்ற 45 துணை ஆட்சியர்கள் வாட்டாட்சியர்களாக பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளனர்.