தமிழகத்தில் மின்வாரியம் பயனர்களுக்கான மின் இணைப்பு மற்றும் அதனை சார்ந்த பல பணிகளை செய்வதற்கு குறிப்பிட்ட நாட்களில் அடிக்கடி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்பு தாளர்கள் தங்களின் மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான பணிகளை செய்ய ஜூலை 24ஆம் தேதி அதாவது இன்று முதல் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மற்றும் பண்டிகை நாட்களைத் தவிர அனைத்து நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறும். இதற்காக மின்வாரியத்தின் இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக பெயர் மாற்றும் பணிகள் முன்னதாகவே நடைமுறைகளில் இருந்து வரும் நிலையில் தற்போது அனைவரும் பயனடையும் வகையில் இந்த முகாம் நடத்தப்பட உள்ளது. இதற்காக பயனர்கள் தங்களின் மின் இணைப்பு ஆவணங்களுடன் 726 கட்டணம் செலுத்தி பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.