தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக தற்போது வீடு வீடாக சென்று மக்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து விண்ணப்ப பதிவிற்கான சிறப்பு முகாம் ஜூலை 24ஆம் தேதி இன்று  முதல் தொடங்கப்பட உள்ளது.

அதனை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இந்த திட்டம் முதல் கட்டமாக மகளிர் சுய உதவி குழுக்கள் திட்டம் தொடங்கிய தர்மபுரி மாவட்டத்தில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டம் தகுதி வாய்ந்த பெண்கள் அனைவருக்கும் ஒருவர் கூட விடுபடாமல் போய் சேர வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. எனவே இன்று முதல் மக்கள் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.