ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு  தொடங்கியது. பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து காலியாக உள்ள இந்த தொகுதிக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் இ வி கே எஸ் இளங்கோவன் போட்டியிடுகின்றார். அதிமுக சார்பாக தென்னரசு மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா நவநீதன் என மொத்தம் 77 பேர் தேர்தலில் களம் இறங்குகின்றனர். வாக்கு எண்ணிக்கை வருகின்ற மார்ச் இரண்டாம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்களிக்க கட்சி துண்டு மற்றும் கரை வேட்டையுடன் வந்த தேமுதிக வேட்பாளர் ஆனந்தை தேர்தல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது. கட்சியை குறிக்கும் வகையில் கரைவேட்டி அணிய கூடாது என அதிகாரிகளின் அறிவுறுத்தலை அடுத்து உடையை மாற்றி வந்து கட்சி அடையாளம் இன்றி வாக்களித்தார்.