பாமக நிறுவனர் ராமதாஸின் தமிழை தேடி பயணம் வெற்றியடைய விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி ரவிக்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் புதுச்சேரியில் மொழியியல் பண்பாட்டு நிறுவனம் மூடப்படும் நிலையில் உள்ளது. முதலமைச்சர் ரங்கசாமி கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

தமிழ் தான் மூச்சு என கூறும் தமிழிசை சௌந்தரராஜன் துணைநிலை ஆளுநராக இருக்கும்போது மொழிகள் பண்பாட்டு நிறுவனத்தை மூடினால் அவருக்கு அவ பெயர் ஏற்படும் என ரவிக்குமார் தெரிவித்தார். தமிழை தேடி பயணம் என்ற பெயரில் பாமக நிறுவனர் ராமதாஸ் நடத்தும் பயணத்தை வரவேற்பதாக தெரிவித்த அவர் தமிழை மீட்டெடுக்க யார் நடவடிக்கை எடுத்தாலும் ஆதரவளிப்போம் என கூறினார்.