கரும்பு நிலுவைத் தொகை தொடர்பாக இபிஎஸ் வெளியிட்ட அறிக்கைக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார். அதன்படி, “கரும்பு நிலுவைத் தொகை 2021-22 பருவம் வரை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நடப்பு பருவத்தில் தனியார் சர்க்கரை ஆலைகள் மட்டும் ரூ.17 கோடிக்கு நிலுவைத் தொகை தர வேண்டியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டும் முன்பே ‘வருமுன் காப்போம்’ அடிப்படையில் அரசு செயல்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார். மேலும், கரும்பு விவசாயிகளுக்கு சா்க்கரை ஆலைகள் வட்டி நிலுவைத் தொகையை வழங்காதது குறித்து ஆட்சியா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.