ஊட்டி மலை ரயில் சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்த ஒன்றாக உள்ள நிலையில் தொடர் விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை கால விடுமுறைகள் என பல சிறப்பு நாட்களில் ரயில்வே வாரியம் ஊட்டி மலை ரயிலை இயக்கி வருகின்றது. இதற்கான அறிவிப்பு முன்னதாக வெளியிடப்படும் நிலையில் பயணிகள் முன்கூட்டியே ஊட்டி மலை ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர்.

தற்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு விடுமுறை கால சிறப்பு முறையில் நான்கு நாட்களுக்கு இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 16, செப்டம்பர் 30, அக்டோபர் 21, அக்டோபர் 23 ஆகிய தேதிகளில் ஊட்டி மலையில் இயக்கப்பட உள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு கிளம்பி மதியம் 2.25 மணிக்கு ஊட்டிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.