அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு  எதிராக ரூ.1.10 கோடி நஷ்ட ஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். அதாவது தன்னை பற்றி அவதூறாக பேச உதயநிதி ஸ்டாலினுக்கு  தடைவிதிக்க வேண்டும் எனவும் அவர் அந்த மனுவில்  தெரிவித்துள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தது குறித்து பேசியுள்ளார்.

அதாவது எடப்பாடி பழனிச்சாமி குறித்து நான் அவதூறாக எதுவும் பேசவில்லை. சனாதனத்திற்கு எதிராக பேசுவதை அவ்வாறு எடுத்துக் கொள்கிறாரா? என எனக்கு தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.