தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் போதை பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் புகையிலை கூல் லிப் போன்ற போதை பொருளை மாணவர்கள் பயன்படுத்துகின்றன என்பதை கண்காணிக்கவும், பள்ளிகளுக்கு அருகே உள்ள கடைகளில் ஆய்வு செய்யவும், மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தவும் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை உளவியல் நிபுணரை அழைத்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கவும் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.