புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் பூவரசக்குடியில் கிராம உதவியாளராக வேலை பார்க்கும் அன்சாரி(46) என்பவர் தனது மனைவி நஜிரத் பேகம், தாய் ஆசியா பிவி ஆகியோருடன் மனு கொடுப்பதற்காக வந்துள்ளார். அவர் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அன்சாரி கூறியதாவது, கடந்த 5 மாதங்களாக எனக்கு சம்பளம் வழங்கவில்லை.

மேலும் சம்பளம் வழங்க மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் குடும்பத்துடன் கருணை கொலை செய்ய அனுமதி வேண்டி மனு கொடுக்க வந்ததாக தெரிவித்தார். அவரை போலீசார் சமாதானப்படுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வைத்தனர். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். தற்போது அன்சாரி புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேலை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.