தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஆறு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. என் நிலையில் கனமழை பெய்ய உள்ளதால் புதுச்சேரியின் மாஹேபகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜூலை 24 அதாவது இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரபிக் கடலை ஒட்டியுள்ள பல பகுதிகளில் கன மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனைத் தொடர்ந்து குடகு மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் பல மாவட்டங்களுக்கு விடுமுறை குறித்து அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.