புதுவை போக்குவரத்துறை அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா, தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கணவர் குடிகாரன், பெண் வெறியன், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமை செய்யும் ஆண் என குற்றம் சாட்டிய அவர், தன்னை பற்றி சிசுகிசுக்களை பரப்பும் நபருடன் இனி வாழ முடியாது என்பதால் விவாகரத்து பெற விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் தனது கணவர் கொலை மிரட்டல் விடுத்ததாக சந்திர பிரியங்கா டி.ஜி.பி ஸ்ரீநிவாசை சந்தித்து புகார் அளித்தார்.