சென்னை – சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூர் -சென்னைக்கு ஆறு விமானங்கள் என தினம்தோறும் 12 விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தது. இந்த விமானங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும் நிலை உள்ளது. இதனால் பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையில் நேற்று நள்ளிரவில் இருந்து கூடுதலாக விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் சென்னை மற்றும் சிங்கப்பூர் இடையே இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனி சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் பயணிகள் சிரமப்படாமல் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.