நீட் தேர்வு ரத்து என்பது திமுகவுக்கான பிரச்சனை கிடையாது, அது மாணவர்களுக்கான பிரச்சனை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாணவர்களின் மருத்துவ கல்வி உரிமை பறிக்கப்படுவதால்தான் திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது என்று குறிப்பிட்ட உதயநிதி, இதனை மக்கள் இயக்கமாக மாற்ற அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். நீட் தேர்வு ரத்துக்காக இதுவரை 10 லட்சம் கையெழுத்து போடப்பட்டுள்ளதாகவும் உதயநிதி தெரிவித்துள்ளார்.