குடும்ப தலைவிகளுக்கு நவம்பர் 10ஆம் தேதியே ரூ.1000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தீபாவளிக்கு முன்னதாகவே ரூ.1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

அவர்களுக்கு தற்போது குறுஞ்செய்தி அனுப்பும் பணியானது தொடங்கப்பட்டுள்ளது . மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கும் நவம்பர் 10ஆம் தேதிக்கு பின்னர் ரூ.1000 வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.