கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்துள்ள அப்பட்டுவிளைப் பகுதியை சேர்ந்த மரிய சபஸ்டியன் மகன் ஆன்றோ பெல்ஜில். கட்டிட தொழிலாளியான இவருக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்துள்ளது. ஆனால் இவர் மது அருந்துவதால் இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் ஆன்றோ பெல்ஜில் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

இது குறித்து அவரது தந்தை மரிய செபாஸ்டியன் தனது மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து ஆன்றோவின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.