நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், செந்தில்குமார், ராமகிருஷ்ணன், முகிலன், கணேசன் ஆகியோர் கோடியகரையில் தங்கி மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர். அவர்கள் கடந்த 25-ஆம் தேதி கண்ணாடியிழை படையில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கு திசையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்த மீனவர்கள் உயிர் காக்கும் கவசத்தை அணிந்து கொண்டு கடலில் தத்தளித்தனர். மறுநாள் மாலை 6 மணிக்கு அந்த வழியாக படகில் சென்ற ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் தத்தளித்துக் கொண்டிருந்த ஐந்து மீனவர்களையும் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். பின்னர் மீட்கப்பட்ட மீனவர்கள் கோடியகரைக்கு திரும்பி சென்றனர்