மதுரை திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்தவர்கள் குபேந்திரன் – ஆனந்தி தம்பதி. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். குபேந்திரன் மனஸ்தாபம் காரணமாக ஆனந்தியை பிரிந்து சென்றுள்ளார். ஆனாலும் ஆனந்தியின் மாமியார் இருளாயி அவர் மீது மிகுந்த பாசத்துடன் இருந்துள்ளார்.

இதனிடையே கடந்த வருடம் ஆனந்தியின் மாமியார் இருளாயி இறந்து விட்டார். அதன் பிறகு தனது மாமியார் கனவிலும் நினைவிலும் தோன்றி தன்னிடம் வருமாறு அழைக்கிறார் என்று அக்கம் பக்கத்தில் புலம்பி வந்துள்ளார். இதனால் அவரை குடும்பத்தினர் கோவில்களுக்கு அழைத்து சென்று வந்துள்ளனர்.

இந்நிலையில் பெட்ரோலை எடுத்து ஊற்றிக் கொண்ட ஆனந்தி தனது மாமியாரிடம் செல்வதாக கூறிவிட்டு தீக்குளித்துள்ளார். தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.