தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இன்று ஜனவரி 30 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஜனவரி 30 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்யும் வகையில் பிப்ரவரி 10ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளார்.