சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் பகுதியில் வெங்கடேசன்(41) என்பவர் வசித்து வருகிறார். இவர் வட அழகாபுரத்தைச் சேர்ந்த சாவித்திரி(47) என்ற பெண்ணுடன் இணைந்து கடன் வாங்கி தருவதாக கூறி மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் உள்பட பலரிடம் 20,000 ரூபாய் வரை முன்பணம் வாங்கியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு கடன் வாங்கி கொடுக்காமல் ஏமாற்றிவிட்டனர். இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் வெங்கடேஷ் உள்பட சிலர் ஏராளமானவர்களிடம் கடன் வாங்கி தருவதாக கூறி 13 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது. இதனால் வெங்கடேசையும், சாவித்திரியையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.