நாடு முழுவதும் உள்ள லாரி மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு பிரதமர் மோடி மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நேற்று டெல்லியில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024 இல் பேசிய பிரதமர் மோடி, ஓட்டுநர்கள் ஓய்வு எடுக்க தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் கட்டிடங்கள் கட்டித் தரப்படும். ஓய்வு அறைகளில் பார்க்கிங், உணவு, தண்ணீர் மற்றும் கழிப்பறை ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்படும்.

இதில் முதல் கட்டமாக ஆயிரம் கட்டிடங்கள் கட்டித் தரப்படும் என தெரிவித்துள்ளார். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் இருந்து பல்வேறு வெளிமாநிலங்களுக்கும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கும் ஓட்டுநர்கள் பல்லாயிரம் கிலோமீட்டர் பயணம் செய்வதால் அவர்களின் பாதுகாப்பை கருதி இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.