அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பிற்காக மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அது மட்டும் இன்றி ஜனவரி 1 2024 ஆம் ஆருடம் முதல் கூடுதல் கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது. இந்த முறை 4% அகவிலைப்படி உயர்வு வழங்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் 50 சதவீதம் அகவிலைப்படி உயர்வு பலன் ஊழியர்களுக்கு கிடைக்க உள்ளது.

AICPI குறியீட்டின்படி ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படியானது விரைவில் வழங்கப்படும் என்று டிசம்பர் மாதம் வெளியான செய்தியில் உறுதியாகி இருக்கிறது. இது தேர்தல் ஆண்டு இருப்பதால் மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே ஊழியர்களுக்கு கூடுதலாக அகவிலைப்படி  குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.