ஓட்டுக்கு பணம் கொடுப்பது பற்றி புகார் அளித்தால் அதன் பெயரில் 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். பணம், டோக்கன், பரிசு பொருட்கள் வழங்கினால் சி விஜில் மொபைல் செயலியில் புகைப்படம் அல்லது வீடியோவாக பொதுமக்கள் அனுப்பினால் அடுத்த 100 நிமிடங்களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ஓட்டுக்களை பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.