தமிழ்நாட்டில் ஆறு நாட்களில் அரசு பள்ளிகளில் 80 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மார்ச் 1 முதல் மாணவர் சேர்க்கை தொடங்கியதில் இருந்து அரசு பள்ளிகளை நோக்கி மாணவர்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10,411 மாணவர்களும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 292 மாணவர்களும் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். குறைந்த நாட்களில் பள்ளிக்கல்வித்துறை சாதனை படைத்துள்ளது.