தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே  புத்தாண்டு தினத்தை கொண்டாடும் விதமாக சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் ஆபத்தை உணராமல் ஓடும் வேனில் பட்டாசு வெடித்தும், கூச்சலிட்டபடி  ஆரவாரம் செய்தும் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விளாத்திகுளம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் வீடியோ காட்சியில் பதிவான வேன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் விளாத்திகுளம் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியை  சேர்ந்த கணேசன் மகன் இளவரசன் என்பவருக்கு சொந்தமான வேன் என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் அந்த வேனை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் “உரிமையாளர் இளவரசன் மற்றும் பட்டாசுகள் வெடித்த ஜெயம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார்  இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது எனக் கூறி எச்சரித்து” அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அந்த பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.