கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் பகுதியில் பொன்னி சாலமன் என்பவர் வசித்து வருகிறார் நேற்று முன்தினம் இவர் தனது சொகுசு காரில் நாகர்கோவில் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் இரணியல் வள்ளி ஆற்றின் கரைப்பகுதியில் சென்றபோது காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சாலமன் காரை ஓரமாக நிறுத்திவிட்டு உடனடியாக கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்த அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.