எல்ஐசி நிறுவனமானது பல்வேறு பாலிசி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது .அந்தவகையில் ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் பெறுவதற்கு எல்ஐசி புதிய ஜீவன் சாந்தி பாலிசியை எடுக்கலாம். 30 வயது முதல் 70 வயது வரை உள்ள அனைவரும் இதில் சேரலாம். பாலிசிதாரர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் தேவையில்லை.

இந்த திட்டத்தில் ரூ.10 லட்சம் செலுத்தி, 10 ஆண்டுகள் ஒத்திவைப்பு காலத்தை தேர்வு செய்தால், 11ஆம் ஆண்டு முதல் மாதம் ரூ.10 ஆயிரம் கிடைக்கும். பாலிசிதாரர் இறந்தால், செலுத்தப்பட்ட தொகை நாமினிக்கு வழங்கப்படும்.