மங்கோலியா நாட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதால் மக்கள் சாலைகளில் செல்லும் போது கவனமாக பயணிக்குமாறு அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் காரில் சென்று கொண்டிருந்தபோது சுக்பாதர் மாகாண நெடுஞ்சாலையில் இருந்த பனிக்குவியல் ஒன்றில் சிக்கி உள்ளது. இதுகுறித்து மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விரைந்து வந்தவர்கள் காரை பத்திரமாக மீட்டனர். ஆனால் காருக்குள் இருந்த நான்கு பேரும் மூச்சு திணறி உயிரிழந்தனர்.