திருவண்ணாமலையில் ஒரே இரவில் அடுத்தடுத்து நான்கு ஏ டி எம் மையங்களை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எஸ்பிஐ வங்கியில் மூன்று ஏடிஎம்களை கேஸ் வெல்டிங் மூலம் உடைத்து 70 லட்சம், இந்தியா ஒன் ஏடிஎம் ஐ உடைத்து 5 லட்சம் என மொத்தம் 75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஒரே இரவில் துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.