தமிழகத்தில் புயல் நிவாரணத்திற்காக தங்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடித்துக் கொள்ளுமாறு ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. புயல் எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

அதேசமயம் பல தரப்பினரும் மக்களுக்கு உதவி வரும் நிலையில் புயல் நிவாரணத்திற்காக ஒரு நாள் ஊதியத்தை வழங்குவதாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் அறிவித்துள்ளது. அனைத்து ஆசிரியர்களின் சம்பளத்தில் இருந்து ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்து கொள்ளுமாறு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.