மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ். இவர் பிரபல தனியார் வங்கியில் ஒன்றில் முக்கியப் பதவியில் இருக்கிறார். சமுதாயப் பணியில் ஈடுபடுவதோடு சோஷியல் மீடியாவிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இந்நிலையில் நேற்று   அவர் தன்னுடைய ட்விட்டரில்  ஒரு சுவாரஸ்யமான பதிவை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், அவர் கையில் பாம்புகள் மற்றும் பல்லிகளுடன் இருக்கும் படங்கள் உள்ளன. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில், இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் இதை அரசியலுடன் ஒப்பிட்டு விமர்சித்து வருகின்றனர்.