கர்நாடகாவில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட இரட்டை குழந்தைகள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாண்டியாவை சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் திருசூல், திரிஷா என்ற தனது குழந்தைகளுக்கு ஐஸ் வாங்கி கொடுத்துள்ளார். அதை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அவர்கள் உயிரிழந்துள்ளனர். ஐஸ் சாப்பிட்டதே மரணத்திற்கு காரணம் என்று கூறப்படும் நிலையில் பிரேத பரிசோதனைக்கு பின்னரே காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.