மக்களவைத் தேர்தல் நடந்து வரும் நிலையில் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கட்சியின் முக்கிய தலைவரான தஜிந்திர சிங் பிட்டு இன்று கட்சியிலிருந்து விலகியுள்ளார். தற்போது அவர் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக பணியாற்றி வருகின்றார். இவர் பிரியங்கா காந்தியின் நெருங்கிய நண்பரும் கூட. இவர் பாஜகவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருந்தாலும் பாஜகவில் இணைவது குறித்து இவர் தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.