செப்டம்பர் 10 ஆம் தேதி நேற்று நடைபெற்ற மறக்குமா நெஞ்சம் என்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேரி ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்தது. டிக்கெட் வாங்கியும் ஆயிரக்கணக்கானோர் இசை நிகழ்ச்சியை பார்க்க முடியாத அளவுக்கு நிகழ்ச்சி ஏற்பாடு மோசமாக இருந்ததாகவும், முறையான ஏற்பாடுகளும், பாதுகாப்பு வசதிகளும் அளிக்கப்படாததால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானதாக ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக, விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ்-க்கு தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.