மகளிர் உரிமைத்தொகை பெற 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தகுதி உள்ளவர்கள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 1.63 கோடி விண்ணப்பங்கள் தரப்பட்ட நிலையில், 1.6 கோடி விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தகுதி வாய்ந்த பெண்களுக்கு அவரவர் வங்கி கணக்கில் செப்டம்பர் முதல் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

ரூ 1000  தொகை தகுதியானோர் வங்கி கணக்கில் செப்டம்பர் 15 முதல் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைவர் என்பதால் கிடைக்கும் பாராட்டு ஒரு கோடி பாராட்டுகளுக்கு சமம் என்றும், மகளிர் உரிமை திட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.