தமிழகத்தில் 4 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 12ஆம் தேதி வரை சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 4-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 10 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த முழு ஆண்டு தேர்வுகள் ரம்ஜான் பண்டிகை காரணமாக ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டன. அதனால் தேர்வுக்கு ஆயத்தப்படுத்தும் வகையில் ஏப்ரல் 12 வரை மாணவர்களுக்கு பாடம் நடத்துமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.