நடிகர் விஜயகாந்த் மறைந்த 100 நாட்கள் ஆன நிலையில் அவரது நினைவிடத்தில் பிரேமலதா விஜயகாந்த், அவருடைய இளைய மகன் சண்முக பாண்டியன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சண்முக பாண்டியன், தனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

அதன் பிறகு அவரிடம் உங்களுக்கு அரசியலுக்கு வர ஆசை உள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, இப்போ நான் படங்கள் பண்ணிட்டு இருக்கேன். அப்பாவோட ரெண்டு விஷயங்களில் அரசியலை அண்ணன் எடுத்துக் கொண்டார். சினிமாவை நான் எடுத்துக் கொண்டேன் என்று பதில் அளித்துள்ளார்.