நடிகர் மன்சூர் அலிகான் இன்று வேலூர் மார்க்கெட் பகுதியில் இருசக்கர வாகனத்தில் பலாப்பழத்தை வைத்து ஒற்றை ஆளாய் பிரசாரம் செய்தார். அப்போது, மார்க்கெட்டில் விற்கப்பட்ட தாமரையை வாங்கி, “தாமரை மலரவே மலராது அதனால் சாப்ட்டுறனும். அப்பறம் இரட்டை இலையை முழுங்கிறனும்” எனக் கூறி சாப்பிட்டார். ஒரே நேரத்தில் தாமரை (பாஜக), இரட்டை இலையை (அதிமுக) சாப்பிட்டு ஏப்பம் விட்டுவிட்டார்.