அரியலூர் மாவட்டத்தில் உள்ள அருங்கால் கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் கணேசனின் மகன் ஏன் தினமும் மது குடித்து உடம்பை கெடுத்து கொள்கிறீர்கள் என கூறி தனது தந்தையை திட்டியதாக தெரிகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த கணேசன் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.