கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் வீட்டில் ஏசி வெடித்ததில் ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சக்தி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு வீட்டில் திங்கட்கிழமை மாலை திடீரென ஏசி வெடித்ததால் அறை முழுவதும் பெரும் தீ பரவியது. இதில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்த தாயும் இரண்டு குழந்தைகளும் சம்பாவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்த தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இறந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.