நாட்டில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது எஸ்பிஐ வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் உடன் சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மூத்த குடிமக்கள் மற்றும் நோய்வாய்பட்ட வாடிக்கையாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு door step வங்கி சேவைகளை வழங்க எஸ்பிஐ வங்கி முடிவு செய்துள்ளது. கணக்கிலிருந்து பணம் எடுப்பது , காசோலை மற்றும் பணம் டெபாசிட் செய்வது உள்ளிட்ட அனைத்து வகையான வங்கி சேவைகளும் இணையம் மற்றும் செல்போன் செயலி மூலமாக வீட்டில் இருந்தபடியே பெறலாம். இந்த சேவையை பெற வாடிக்கையாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.